தலம் : வாஞ்சியம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : வாஞ்சிநாதர்;
அம்பாள் : வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம்
படையும் பூதமும்
பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய
உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய
பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்
கல்லலொன் றில்லையே. 1
பறப்பை யும்பசு
வும்படுத் துப்பல
திறத்த வும்முடை
யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக்
கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு
வாஞ்சியஞ் சேர்மினே. 2
புற்றி லாடர
வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத்
தேவர் பிரான்பதி
சுற்று மாடங்கள்
சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்
குப்பாவ மில்லையே. 3
அங்க மாறும்
அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர்
தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட
மார்திரு வாஞ்சியந்
தங்கு வார்நம்
மமரர்க் கமரரே. 4
நீறு பூசி
நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும்
அடிகள் உறைபதி
மாறு தானொருங்
கும்வயல் வாஞ்சியந்
தேறி வாழ்பவர்க்
குச்செல்வ மாகுமே. 5
அற்றுப் பற்றின்றி
யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை
யாவான் உறைபதி
தெற்று மாடங்கள்
சூழ்திரு வாஞ்சியங்
கற்றுச் சேர்பவர்க்
குக்கருத் தாவதே. 6
அருக்கன் அங்கி
யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி
யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக
முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை
வார்க்கில்லை யல்லலே. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்