தலம் : பாண்டிக்கொடுமுடி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : கொங்குநாடு
சுவாமி : கொடுமுடிநாதர்;
அம்பாள் : பண்மொழிநாயகி.
திருச்சிற்றம்பலம்
சிட்ட னைச்சிவ
னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை
ஆல நிழலமர்
பட்ட னைத்திருப்
பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ
நம்வினை நாசமே. 1
பிரமன் மாலறி
யாத பெருமையன்
தரும மாகிய
தத்துவன் எம்பிரான்
பரம னாருறை
பாண்டிக் கொடுமுடி
கரும மாகத்
தொழுமட நெஞ்சமே. 2
ஊச லாளல்லள்
ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப்
பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும்
இத்தனை யல்லது
பேசு மாறறி
யாளொரு பேதையே. 3
தூண்டி யசுடர்
போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி
யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி
மேய பரமனைக்
காண்டு மென்பவர்க்
கேதுங் கருத்தொணான். 4
நெருக்கி யம்முடி
நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந்
தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி
யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது
கைகண்ட யோகமே. 5
இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்