தலம் : பொது
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : பொது
சிறப்பு: பாவநாசத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாவ மும்பழி
பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந்
தாடு மவன்கழல்
மேவ ராய்மிக
வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன்
கலந்தருள் செய்யுமே. 1
கங்கை யாடிலென்
காவிரி யாடிலென்
கொங்கு தண்கும
ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட
லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ
னாதவர்க் கில்லையே. 2
பட்ட ராகிலென்
சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு
மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும்
இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ
னாதவர்க் கில்லையே. 3
வேத மோதிலென்
வேள்விகள் செய்கிலென்
நீதி நூல்பல
நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ
ராறும் உணரிலென்
ஈச னையுள்கு
வார்க்கன்றி இல்லையே. 4
காலை சென்று
கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும்
விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி
யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென்
பார்க்கன்றி இல்லையே. 5
கான நாடு
கலந்து திரியிலென்
ஈன மின்றி
இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல்
ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க்
கன்றிநன் கில்லையே. 6
கூட வேடத்த
ராகிக் குழுவிலென்
வாடி யூனை
வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன்
அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல்
லாற்பயன் இல்லையே. 7
நன்று நோற்கிலென்
பட்டினி யாகிலென்
குன்ற மேறி
யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற்
குளித்துத் திரியிலென்
என்று மீசனென்
பார்க்கன்றி இல்லையே. 8
கோடித் தீர்த்தங்
கலந்து குளித்தவை
ஆடி னாலும்
அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை
ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட
மூர்க்கனோ டொக்குமே. 9
மற்று நற்றவஞ்
செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத்
தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை
யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க்
குப்பயன் இல்லையே. 10
திருச்சிற்றம்பலம்