05.060 ஏது மொன்று

தலம் : மாற்பேறு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : தொண்டைநாடு
சுவாமி : மால்வணங்கீசர்;
அம்பாள் : கருணாம்பிகை
.

திருச்சிற்றம்பலம்

ஏது மொன்று
மறிவில ராயினும்
ஓதி அஞ்செழுத்
தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி
அவரவர் உள்ளத்தே
மாதுந் தாமும்
மகிழ்வர்மாற் பேறரே. 1

அச்ச மில்லைநெஞ்
சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை
யாய்வினை போயறக்
கச்ச மாவிட
முண்டகண் டாவென
வைச்ச மாநிதி
யாவர் மாற்பேறரே. 2

சாத்தி ரம்பல
பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு
லமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ
மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள்
அருளுமாற் பேறரே. 3

இருந்து சொல்லுவன்
கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும்
அஞ்செழுத் தோதினாற்
பொருந்து நோய்பிணி
போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர்
மன்னுமாற் பேறரே. 4

சாற்றிச் சொல்லுவன்
கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு
வான்கழ லேத்தினாற்
கூற்றை நீக்கிக்
குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ
னாவர்மாற் பேறரே. 5

ஈட்டு மாநிதி
சால இழக்கினும்
வீட்டுங் காலன்
விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட
மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும்
வல்லர்மாற் பேறரே. 6

ஐய னேயர
னேயென் றரற்றினால்
உய்ய லாமுல
கத்தவர் பேணுவர்
செய்ய பாத
மிரண்டும் நினையவே
வைய மாளவும்
வைப்பர்மாற் பேறரே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

உந்திச் சென்று
மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு
தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில்
சூழுமாற் பேறென
அந்த மில்லதோர்
இன்பம் அணுகுமே. 10

திருச்சிற்றம்பலம்