05.082 விண்ட மாமலர்

தலம் : வான்மியூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : தொண்டைநாடு
சுவாமி : மருந்தீஸ்வரர்;
அம்பாள் : திரிபுரசுந்தரி.

திருச்சிற்றம்பலம்

விண்ட மாமலர்
கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன்
றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த
பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில்
வான்மியூ ரீசனே. 1

பொருளுஞ் சுற்றமும்
பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை
மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல
ஆதியா யென்றலும்
மருள றுத்திடும்
வான்மியூ ரீசனே. 2

மந்த மாகிய
சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத்
தானை யடைந்துநின்
றெந்தை யீசனென்
றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும்
வான்மியூ ரீசனே. 3

உள்ள முள்கலந்
தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள
வழிக்கசி வானலன்
வெள்ள முமர
வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய
வான்மியூ ரீசனே. 4

படங்கொள் பாம்பரைப்
பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை
மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று
தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும்
வான்மியூ ரீசனே. 5

நெஞ்சி லைவர்
நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி
யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர்
தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும்
வான்மியூ ரீசனே. 6

நுணங்கு நூலயன்
மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர
விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத்
தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும்
வான்மியூ ரீசனே. 7

ஆதி யும்மர
னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு
வாய பரமனென்
றோதி யுள்குழைந்
தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும்
வான்மியூ ரீசனே. 8

ஓட்டை மாடத்தி
லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன்
முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர்
தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும்
வான்மியூ ரீசனே. 9

பார மாக
மலையெடுத் தான்றனைச்
சீர மாகத்
திருவிர லூன்றினான்
ஆர்வ மாக
அழைத்தவ னேத்தலும்
வார மாயினன்
வான்மியூ ரீசனே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்