06.030 எம்பந்தவல்வினைநோய்

தலம் : ஆரூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

எம்பந்தவல்வினைநோய்தீர்த்திட்டான்காண்
ஏழ்கடலுமேழுலகுமாயினான்காண்
வம்புந்துகொன்றையந்தார்மாலையான்காண்
வளர்மதிசேர்கண்ணியன்காண்வானோர்வேண்ட
அம்பொன்றால்மூவெயிலுமெரிசெய்தான்காண்
அனலாடியானஞ்சுமாடினான்காண்
செம்பொன்செய்மணிமாடத்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 1

அக்குலாம்அரையினன்காண்அடியார்க்கென்றும்
ஆரமுதாய்அண்ணிக்கும்ஐயாற்றான்காண்
கொக்குலாம்பீலியொடுகொன்றைமாலை
குளிர்மதியுங்கூரரவும்நீருஞ்சென்னித்
தொக்குலாஞ்சடையினன்காண்தொண்டர்செல்லுந்
தூநெறிகாண்வானவர்கள்துதிசெய்தேத்துந்
திக்கெலாம்நிறைந்தபுகழ்த்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 2

நீரேறுசடைமுடியெந்நிமலன்றான்காண்
நெற்றிமேலொற்றைக்கண்நிறைவித்தான்காண்
வாரேறுவனமுலையாள்பாகத்தான்காண்
வளர்மதிசேர்சடையான்காண்மாதேவன்காண்
காரேறுமுகிலனையகண்டத்தான்காண்
கல்லாலின்கீழறங்கள்சொல்லினான்காண்
சீரேறுமணிமாடத்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 3

கானேறுகளிற்றுரிவைப்போர்வையான்காண்
கற்பகங்காண்காலனையன்றுதைசெய்தான்காண்
ஊனேறுமுடைதலையிற்பலிகொள்வான்காண்
உத்தமன்காண்ஒற்றியூர்மேவினான்காண்
ஆனேறொன்றதுவேறும்அண்ணல்தான்காண்
ஆதித்தன்பல்லிறுத்தஆதிதான்காண்
தேனேறுமலர்ச்சோலைத்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 4

பிறப்போடிறப்பென்றுமில்லாதான்காண்
பெண்ணுருவோடாணுருவமாயினான்காண்
மறப்படுமென்சிந்தைமருள்நீக்கினான்காண்
வானவருமறியாதநெறிதந்தான்காண்
நறப்படுபூமலர்தூபந்தீபநல்ல
நறுஞ்சாந்தங்கொண்டேத்திநாளும்வானோர்
சிறப்போடுபூசிக்குந்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 5

சங்கரன்காண்சக்கரமாற்கருள்செய்தான்காண்
தருணேந்துசேகரன்காண்தலைவன்றான்காண்
அங்கமலத்தயன்சிரங்கள்ஐந்திலொன்றை
அறுத்தவன்காண்அணிபொழில்சூழ்ஐயாற்றான்காண்
எங்கள்பெருமான்காணென்னிடர்கள்போக
அருள்செய்யும்இறைவன்காண்இமையோரேத்துஞ்
செங்கமலவயல்புடைசூழ்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 6

நன்றருளித்தீதகற்றும்நம்பிரான்காண்
நான்மறையோடாறங்கமாயினான்காண்
மின்றிகழுஞ்சோதியன்காண்ஆதிதான்காண்
வெள்ளேறுநின்றுலவுகொடியினான்காண்
துன்றுபொழிற்கச்சியேகம்பன்றான்காண்
சோற்றுத்துறையான்காண்சோலைசூழ்ந்த
தென்றலார்மணங்கமழுந்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 7

பொன்னலத்தநறுங்கொன்றைச்சடையினான்காண்
புகலூரும்பூவணமும்பொருந்தினான்காண்
மின்னலத்தநுண்ணிடையாள்பாகத்தான்காண்
வேதியன்காண்வெண்புரிநூல்மார்பினான்காண்
கொன்னலத்தமூவிலைவேல்ஏந்தினான்காண்
கோலமாநீறணிந்தமேனியான்காண்
செந்நலத்தவயல்புடைசூழ்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 8

விண்டவர்தம்புரமூன்றுமெரிசெய்தான்காண்
வேலைவிடமுண்டிருண்டகண்டத்தான்காண்
மண்டலத்திலொளிவளரவிளங்கினான்காண்
வாய்மூரும்மறைக்காடும்மருவினான்காண்
புண்டரிகக்கண்ணானும்பூவின்மேலைப்
புத்தேளுங்காண்பரியபுராணன்றான்காண்
தெண்டிரைநீர்வயற்புடைசூழ்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 9

செருவளருஞ்செங்கண்மாலேற்றினான்காண்
தென்னானைக்காவன்காண்தீயில்வீழ
மருவலர்தம்புரமூன்றுமெரிசெய்தான்காண்
வஞ்சகர்பாலணுகாதமைந்தன்றான்காண்
அருவரையைஎடுத்தவன்றன்சிரங்கள்பத்தும்
ஐந்நான்குதோளுநெரிந்தலறவன்று
திருவிரலாலடர்த்தவன்காண்திருவாரூரிற்
றிருமூலட்டானத்தெஞ்செல்வன்றானே. 10

திருச்சிற்றம்பலம்