06.041 வகையெலாமுடையாயும்

தலம் : நெய்த்தானம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை

திருச்சிற்றம்பலம்

வகையெலாமுடையாயும்நீயேயென்றும்
வான்கயிலைமேவினாய்நீயேயென்றும்
மிகையெலாம்மிக்காயும்நீயேயென்றும்
வெண்காடுமேவினாய்நீயேயென்றும்
பகையெலாந்தீர்த்தாண்டாய்நீயேயென்றும்
பாசூர்அமர்ந்தாயும்நீயேயென்றும்
திகையெலாந்தொழச்செல்வாய்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்னெஞ்சுளாயே. 1

ஆர்த்தஎனக்கன்பன்நீயேயென்றும்
ஆதிக்கயிலாயன்நீயேயென்றுங்
கூர்த்தநடமாடிநீயேயென்றுங்
கோடிகாமேயகுழகாவென்றும்
பார்த்தற்கருள்செய்தாய்நீயேயென்றும்
பழையனூர்மேவியபண்பாவென்றுந்
தீர்த்தன்சிவலோகன்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 2

அல்லாய்ப்பகலானாய்நீயேயென்றும்
ஆதிக்கயிலாயன்நீயேயென்றும்
கல்லாலமர்ந்தாயும்நீயேயென்றுங்
காளத்திக்கற்பகமும்நீயேயென்றும்
சொல்லாய்ப்பொருளானாய்நீயேயென்றுந்
சோற்றுத்துறையுறைவாய்நீயேயென்றும்
செல்வாய்த்திருவானாய்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 3

மின்னேரிடைபங்கன்நீயேயென்றும்
வெண்கயிலைமேவினாய்நீயேயென்றும்
பொன்னேர்சடைமுடியாய்நீயேயென்றும்
பூதகணநாதன்நீயேயென்றும்
என்னாவிரதத்தாய்நீயெயென்றும்
ஏகம்பத்தென்னீசன்நீயேயென்றும்
தென்னூர்ப்பதியுளாய்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 4

முந்தியிருந்தாயும்நீயேயென்றும்
முன்கயிலைமேவினாய்நீயேயென்றும்
நந்திக்கருள்செய்தாய்நீயேயென்றும்
நடமாடிநள்ளாறந்நீயேயென்றும்
பந்திப்பரியாயும்நீயேயென்றும்
பைஞ்ஞீலிமேவினாய்நீயேயென்றும்
சிந்திப்பரியாயும்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 5

தக்காரடியார்க்குநீயேயென்றுந்
தலையார்கயிலாயன்நீயேயென்றும்
அக்காரம்பூண்டாயும்நீயேயென்றும்
ஆக்கூரில்தான்றோன்றிநீயேயென்றும்
புக்காயஏழுலகும்நீயேயென்றும்
புள்ளிருக்குவேளூராய்நீயேயென்றும்
தெக்காருமாகோணத்தானேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 6

புகழும்பெருமையாய்நீயேயென்றும்
பூங்கயிலைமேவினாய்நீயேயென்றும்
இகழுந்தலையேந்திநீயேயென்றும்
இராமேச்சரத்தின்பன்நீயேயென்றும்
அகழும்மதிலுடையாய்நீயேயென்றும்
ஆலவாய்மேவினாய்நீயேயென்றும்
திகழும்மதிசூடிநீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 7

வானவர்க்குமூத்திளையாய்நீயேயென்றும்
வானக்கயிலாயன்நீயேயென்றும்
கானநடமாடிநீயேயென்றும்
கடவூரில்வீரட்டன்நீயேயென்றும்
ஊனார்முடியறுத்தாய்நீயேயென்றும்
ஒற்றியூராரூராய்நீயேயென்றும்
தேனாய்அமுதானாய்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 8

தந்தைதாயில்லாதாய்நீயேயென்றும்
தலையார்கயிலாயன்நீயேயென்றும்
எந்தாயெம்பிரானானாய்நீயேயென்றும்
ஏகம்பத்தென்னீசன்நீயேயென்றும்
முந்தியமுக்கணாய்நீயேயென்றும்
மூவலூர்மேவினாய்நீயேயென்றும்
சிந்தையாய்த்தேனூராய்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 9

மறித்தான்வலிசெற்றாய்நீயேயென்றும்
வான்கயிலைமேவினாய்நீயேயென்றும்
வெறுத்தார்பிறப்பறுப்பாய்நீயேயென்றும்
வீழிமிழலையாய்நீயேயென்றும்
அறத்தாய்அமுதீந்தாய்நீயேயென்றும்
யாவர்க்குந்தாங்கொணாநஞ்சமுண்டு
பொறுத்தாய்புலனைந்தும்நீயேயென்றும்
நின்றநெய்த்தானாவென்நெஞ்சுளாயே. 10

திருச்சிற்றம்பலம்