06.050 போரானைஈருரிவைப்

தலம் : வீழிமிழலை
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

போரானைஈருரிவைப்போர்வையானைப்
புலியதளேயுடையாடைபோற்றினானைப்
பாரானைமதியானைப்பகலானானைப்
பல்லுயிராய்நெடுவெளியாய்ப்பரந்துநின்ற
நீரானைக்காற்றானைத்தீயானானை
நினையாதார்புரமெரியநினைந்ததெய்வத்
தேரானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 1

சவந்தாங்குமயானத்துச்சாம்பலென்பு
தலையோடுமயிர்க்கயிறுதரித்தான்தன்னைப்
பவந்தாங்குபாசுபதவேடத்தானைப்
பண்டமரர்கொண்டுகந்தவேள்வியெல்லாங்
கவர்ந்தானைக்கச்சியேகம்பன்தன்னைக்
கழலடைந்தான்மேற்கறுத்தகாலன்வீழச்
சிவந்தானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 2

அன்றாலின்கீழிருந்தங்கறஞ்சொன்னானை
அகத்தியனையுகப்பானைஅயன்மால்தேட
நின்றானைக்கிடந்தகடல்நஞ்சுண்டானை
நேரிழையைக்கலந்திருந்தேபுலன்களைந்தும்
வென்றானைமீயச்சூர்மேவினானை
மெல்லியலாள்தவத்தினிறையளக்கலுற்றுச்
சென்றானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 3

தூயானைச்சுடர்ப்பவளச்சோதியானைத்
தோன்றியஎவ்வுயிர்க்குந்துணையாய்நின்ற
தாயானைச்சக்கரமாற்கீந்தான்தன்னைச்
சங்கரனைச்சந்தோகசாமம்ஒதும்
வாயானைமந்திரிப்பார்மனத்துளானை
வஞ்சனையால்அஞ்செழுத்தும்வழுத்துவார்க்குச்
சேயானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 4

நற்றவத்தின்நல்லானைத்தீதாய்வந்த
நஞ்சமுதுசெய்தானைஅமுதமுண்ட
மற்றமரர்உலந்தாலும்உலவாதானை
வருகாலஞ்செல்காலம்வந்தகாலம்
உற்றவத்தையுணர்ந்தாரும்உணரலாகா
ஒருசுடரைஇருவிசும்பினூர்மூன்றொன்றச்
செற்றவனைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 5

மைவானமிடற்றானைஅவ்வான்மின்போல்
வளர்சடைமேல்மதியானைமழையாயெங்கும்
பெய்வானைப்பிச்சாடலாடுவானைப்
பிலவாயபேய்க்கணங்களார்க்கச்சூலம்
பொய்வானைப்பொய்யிலாமெய்யன்தன்னைப்
பூதலமும்மண்டலமும்பொருந்தும்வாழ்க்கை
செய்வானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 6

மிக்கானைக்குறைந்தடைந்தார்மேவலானை
வெவ்வேறாய்இருமூன்றுசமயமாகிப்
புக்கானைஎப்பொருட்கும்பொதுவானானைப்
பொன்னுலகத்தவர்போற்றும்பொருளுக்கெல்லாந்
தக்கானைத்தானன்றிவேறொன்றில்லாத்
தத்துவனைத்தடவரையைநடுவுசெய்த
திக்கானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 7

வானவர்கோன்தோளிறுத்தமைந்தன்தன்னை
வளைகுளமும்மறைக்காடும்மன்னினானை
ஊனவனைஉயிரவனையொருநாட்பார்த்தன்
உயர்தவத்தின்நிலையறியலுற்றுச்சென்ற
கானவனைக்கயிலாயம்மேவினானைக்
கங்கைசேர்சடையானைக்கலந்தார்க்கென்றுந்
தேனவனைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 8

பரத்தானையிப்பக்கம்பலவானானைப்
பசுபதியைப்பத்தர்க்குமுத்திகாட்டும்
வரத்தானைவணங்குவார்மனத்துளானை
மாருதமால்எரிமூன்றும்வாய்அம்பீர்க்காஞ்
சரத்தானைச்சரத்தையுந்தன்தாட்கீழ்வைத்த
தபோதனனைச்சடாமகுடத்தணிந்தபைங்கட்
சிரத்தானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 9

அறுத்தானைஅயந்தலைகள்அஞ்சிலொன்றை
அஞ்சாதேவரையெடுத்தஅரக்கன்தோள்கள்
இறுத்தானையெழுநரம்பினிசைகேட்டானை
இந்துவினைத்தேய்த்தானைஇரவிதன்பல்
பறித்தானைப்பகீரதற்காவானோர்வேண்டப்
பரந்திழியும்புனற்கங்கைபனிபோலாங்குச்
செறித்தானைத்திருவீழிமிழலையானைச்
சேராதார்தீநெறிக்கேசேர்கின்றாரே. 10

திருச்சிற்றம்பலம்