கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்
162) பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2)
163) பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
164) திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
165) பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.
166) கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்து குழல்வாராய்அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய்அக்காக்காய்.
167) கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
168) பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்ட குழல்வாராய்அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
169) உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால் குழல்வாராய்அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
170) மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்.
171) கண்டார்பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2)
[…] ஐந்தாம் திருமொழி – பின்னைமணாளனை […]