இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்

இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்கவேண்டா வென்று கண்ணனை வேண்டுதல்

514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2) 1

515 இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்!
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே. 2

516 குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! உன்னைக்
கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல்
வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம்
தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 3

517 பெய்யுமாமுகில்போல்வண்ணா! உன்றன்பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றிமயக்க உன்முகம் மாயமந்திரந்தான்கொலோ?
நொய்யர்பிள்ளைகளென்பதற்கு உன்னை நோவநாங்களுரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 4

518 வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல்
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய்
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே. 5

519 முற்றிலாதபிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுண்டுதிண்ணென நாமது
கற்றிலோம் கடலையடைத்தரக்கர்குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப்பூசலாக்கியசேவகா! எம்மைவாதியேல். 6

520 பேதம்நன்கறிவார்களோடு இவைபேசினால்பெரிதிஞ்சுவை
யாதுமொன்றறியாதபிள்ளைகளோமை நீநலிந்தென்பயன்?
ஓதமாகடல்வண்ணா! உன்மணவாட்டிமாரொடுசூழறும்
சேதுபந்தம்திருத்தினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 7

521 வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரம்கையிலேந்தினாய்!
கட்டியும்கைத்தால் இன்னாமையறிதியேகடல்வண்ணனே. 8

522 முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய் எம்மைப்
பற்றிமெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம்நின்றவரெஞ்சொல்லார்? 9

523 சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று
வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன்
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. (2) 10

1 thought on “இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்”

Leave a Reply to நாச்சியார் திருமொழி – மயூரகிரிCancel reply