தலம் : சிராப்பள்ளி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : தாயுமானேஸ்வரர்;
அம்பாள் : மட்டுவார்குழலி.
திருச்சிற்றம்பலம்
மட்டு வார்குழ
லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்
தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்
கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ்
சிராப்பள்ளிச் செல்வரே. 1
அரிய யன்றலை
வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு
தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப்
பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ
அங்கிருப் பார்களே. 2
அரிச்சி ராப்பகல்
ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ்
சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி
யென்றலுந் தீவினை
நரிச்சி ராது
நடக்கும் நடக்குமே. 3
தாயு மாயெனக்
கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும்
ஆண்ட பெருந்தகை
தேய நாதன்
சிராப்பள்ளி மேவிய
நாய னாரென
நம்வினை நாசமே. 4
இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5
இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10
திருச்சிற்றம்பலம்