05.085 மட்டு வார்குழ லாளொடு

திருச்சிற்றம்பலம்

மட்டு வார்குழ
லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்
தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்
கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ்
சிராப்பள்ளிச் செல்வரே. 1

அரிய யன்றலை
வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு
தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப்
பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ
அங்கிருப் பார்களே. 2

அரிச்சி ராப்பகல்
ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ்
சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி
யென்றலுந் தீவினை
நரிச்சி ராது
நடக்கும் நடக்குமே. 3

தாயு மாயெனக்
கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும்
ஆண்ட பெருந்தகை
தேய நாதன்
சிராப்பள்ளி மேவிய
நாய னாரென
நம்வினை நாசமே. 4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 10

திருச்சிற்றம்பலம்