தலம் : பொது
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம் திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு : பொது
சிறப்பு: உள்ளத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
நீற லைத்ததோர்
மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின்
றாடும் அமுதினைத்
தேற லைத்தெளி
யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 1
பொந்தை யைப்புக்கு
நீக்கப் புகுந்திடுந்
தந்தை யைத்தழல்
போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி
வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 2
வெள்ளத் தார்விஞ்சை
யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடை
வைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி
யம்மன மொன்றிநின்
றுள்ளத் தில்லொளி
யைக்கண்ட துள்ளமே. 3
அம்மா னையமு
தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து
வத்தடி யார்தொழுஞ்
செம்மா னநிறம்
போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 4
கூறே றும்முமை
பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை
மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை
யேந்திப் பலஇலம்
ஏறேறு மெந்தையைக்
கண்டதெ னுள்ளமே. 5
முன்னெஞ் சம்மின்றி
மூர்க்கராய்ச் சாகின்றார்
தன்னெஞ் சந்தமக்
குத்தாம் இலாதவர்
வன்னெஞ் சம்மது
நீங்குதல் வல்லீரே
என்னெஞ்சி லீசனைக்
கண்டதெ னுள்ளமே. 6
வென்றா னைப்புல
னைந்துமென் தீவினை
கொன்றா னைக்குணத்
தாலே வணங்கிட
நன்றா நன்மனம்
வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 7
மருவி னைமட
நெஞ்சம் மனம்புகுங்
குருவி னைக்குணத்
தாலே வணங்கிடுந்
திருவி னைச்சிந்தை
யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 8
தேச னைத்திரு
மால்பிர மன்செயும்
பூச னைப்புண
ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி
னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 9
வெறுத்தா னைம்புல
னும்பிர மன்றலை
அறுத்தா னையரக்
கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா
லினில்விர லொன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு
கொண்டதெ னுள்ளமே. 10
திருச்சிற்றம்பலம்