Thiruppugal 1189 Maruporukalan
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த – தனதான
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
வாரிதுயி லாவ தற்கும் – வசையேசொல்
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
வாயுமிள வாடை யிற்கு – மதனாலே
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
வேறுபடு மேனி சற்று – மழியாதே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று – வரவேணும்
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
ஆறுமுக னேகு றத்தி – மணவாளா
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு – மிளையோனே
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
சேவலவ நீப மொய்த்த – திரள்தோளா
சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த
தேவர்சிறை மீள விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த – தனதான
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும்
வாரி துயிலா அதற்கும் – வசையே சொல்
மாய மடவார் தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும்
வாயும் இள வாடையிற்கும் – அதனாலே
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து
வேறு படு மேனி சற்றும் – அழியாதே
வேடர் குல மாதினுக்கும் வேடை கெடவே நடித்து
மேவும் இரு பாதம் உற்று – வரவேணும்
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த
ஆறு முகனே குறத்தி – மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி
ஆலும் மயில் ஏறி நிற்கும் – இளையோனே
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த
சேவலவ நீபம் மொய்த்த – திரள் தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த
தேவர் சிறை மீள விட்ட – பெருமாளே.
English
mARuporu kAla nokkum vAnilezhu mAma thikkum
vArithuyi lAva thaRkum – vasaiyEsol
mAyamada vArtha makkum Ayarkuzha lUthi saikkum
vAyumiLa vAdai yiRku – mathanAlE
vERupadu pAya lukku mEyenathu pEthai yeyththu
vERupadu mEni satRu – mazhiyAthE
vEdarkula mAthi nukku vEdaikeda vEna diththu
mEvumiru pAtha mutRu – varavENum
ARumidai vALa rakkar neeRupada vEle duththa
ARumuka nEku Raththi – maNavALA
Azhiyula kEzha dakki vAsukiyai vAya dakki
Alumayi lERi niRku – miLaiyOnE
seeRupada mEru veRpai neeRupada vEsi naththa
sEvalava neepa moyththa – thiraLthOLA
sErumada lAlmi kuththa cUrarkodu pOya daiththa
thEvarsiRai meeLa vitta – perumALE.
English Easy Version
mARu poru kAlan okkum vAnil ezhu mA mathikkum
vAri thuyilA athaRkum – vasaiyE sol
mAya madavAr thamakkum Ayar kuzhal Uthu isaikkum
vAyum iLa vAdaiyiRkum – athanAlE
vERupadu pAyalukkumE enathu pEthai eyththu
vERu padu mEni satRum – azhiyAthE
vEdar kula mAthinukkum vEdai kedavE nadiththu
mEvum iru pAtham utRu – varavENum
ARum midai vAL arakkar neeRu pada vEl eduththa
ARu mukanE kuRaththi – maNavALA
Azhi ulaku Ezhu adakki vAsukiyai vAy adakki
Alum mayil ERi niRkum – iLaiyOnE
seeRu pada mEru veRpai neeRu padavE sinaththa
sEvalava neepam moyththa – thiraL thOLA
sErum adalAl mikuththa cUrar kodu pOy adaiththa
thEvar siRai meeLa vitta – perumALE