திருப்புகழ் 1224 ஏட்டிலே வரை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1224 Ettilevarai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன – தந்ததான

ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி – தென்றுதேடி

ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகு – லங்கள்பேசிக்

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல – கங்களேசக்

காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொ – ழிந்திடாதோ

கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப – மங்கைகோவே

கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேற்சி காவள – கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற – மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தாத்த தானன தாத்த தானன
தாத்த தானன – தந்ததான

ஏட்டிலே வரை பாட்டிலே சில
நீட்டிலே இனிதென்று – தேடி

ஈட்டு மாபொருள் பாத்துணாது இகல்
ஏற்றமான – குலங்கள்பேசி

காட்டிலே யியல் நாட்டிலே பயில்
வீட்டிலே – உலகங்கள் ஏச

காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
யாக்கை மாய்வது – ஒழிந்திடாதோ

கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை
கோட்டு வால் இப – மங்கை கோவே

கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு
வேற் சிகாவள – கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற – மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தியே கழல்
போற்று தேவர்கள் – தம்பிரானே.

English

EttilE varai pAttilE sila
neettilE ini – dhendru thEdi

eettu mAporuL pAththuNAdh igal
Etra mAna – kulangaL pEsik

kAttilE iyal nAttilE payil
veettilE – ulagangaL Esa

kAkkai nAy nari pEyk kuzhAmuNa
yAkkai mAyvadh – ozhindhidAdhO

kOttum Ayira nAtta nAduRai
kOttu vAliba – mangai kOvE

kOththa vElaiyi lArththa sUrporu
vER sikAvaLa – kongil vELE

pUttuvAr silai kOttu vEduvar
pUtkai sEr kuRa – mangai bAgA

pUththa mAmalar sAththiyE kazhal
pOtru dhEvargaL – thambirAnE.

English Easy Version

EttilE varai pAttilE sila
neettilE ini dhendru – thEdi

eettu mAporuL pAththuNAdhu
igal Etra mAna – kulangaL pEsi

kAttilE iyal nAttilE payil
veettilE ulagangaL – Esa

kAkkai nAy nari pEyk kuzhAmuNa
yAkkai mAyvadh – ozhindhidAdhO

kOttum Ayira nAtta nAduRai
kOttu vAliba – mangai kOvE

kOththa vElaiyi lArththa sUr poruvER
sikAvaLa – kongil vELE

pUttuvAr silai kOttu vEduvar
pUtkai sEr kuRa – mangai bAgA

pUththa mAmalar sAththiyE kazhal
pOtru dhEvargaL – thambirAnE.