Thiruppugal 358 Uraikkarigai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான – தந்ததான
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை – யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் – கண்டிலேன்யான்
குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு – கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் – மங்குவேனோ
அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ – ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ – மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி – லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான – தந்ததான
உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர்
உனக்கோ மடல் கோவை – ஒன்று பாட
உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி
உனைப் பாரில் ஒப்பார்கள் – கண்டிலன் யான்
குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே
குடிக்காண் முடிப்போடு – கொண்டு வா பொன்
குலப் பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய்
எனக் கூறி இடர்ப்பாடின் – மங்குவேனோ
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய்
அனற்கே புனற்கே – வரைந்த ஏடிட்டு
அறத்தாய் எனப் பேர் படைத்தாய் புனல் சேல்
அறப் பாய் வயல் கீழ் – அமர்ந்த வேளே
திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே
சிவ த்யானம் உற்றோர் – சிலந்தி நூல் செய்
திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர்
திருச் சாலகச் சோதி – தம்பிரானே.
English
uraikkA rikaippA lenakkE muthaRpE
runakkO madaRkOvai – yonRupAda
uzhappA thipakkO dezhuththA NiyaiththE
dunaippA riloppArkaL – kaNdilEnyAn
kuraikkA navithyA kavippU parukkE
kudikkAN mudippOdu – koNduvApon
kulappU NirathnA thipotRU seduppA
yenakkU RidarppAdin – manguvEnO
araikkA daisutRAr thamizhkkU daliRpOy
anaRkE punaRkEva – rainthaEdit
taRaththA yenappEr padaiththAy punaRsE
laRappAy vayaRkeezha – marnthavELE
thiraikkA virikkE karaikkA nakaththE
sivathyA namutROrsi – lanthinUlsey
thirukkA vaNaththE yiruppA rarutkUr
thiruchchA lakacchOthi – thambirAnE.
English Easy Version
uraik kArikaip pAl enakkE muthal pEr
unakkO madal kOvai – onRu pAda
uzhappAthu ipak kOdu ezhuththANiyaith thEdi
unaip pAril oppArkaL – kaNdilan yAn
kuraikku Ana vithyA kavip pUparukkE
kudikkAN mudippOdu – koNdu vA pon
kulap pUN irathnAthi pon thUsu eduppAy
enak kURi idarppAdin – manguvEnO
araikku Adai sutRAr thamizhk kUdalil pOy
anaRkE punaRkE varaintha – Edittu
aRaththAy enap pEr padaiththAy punal sEl
aRap pAy vayal keezh – amarntha vELE
thiraik kAvirikkE karaik kAnakaththE
siva thyAnam utROr silanthi – nUl sey
thiruk kAvaNaththE iruppAr aruL kUr
thiruc chAlakac chOthi – thambirAnE.