திருப்புகழ் 432 பாண மலரது (திருவருணை)

Thiruppugal 432 Panamalaradhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனதன தத்தம் – தனதான

பாண மலரது தைக்கும் – படியாலே
பாவி யிளமதி கக்குங் – கனலாலே

நாண மழிய வுரைக்குங் – குயிலாலே
நானு மயலி லிளைக்குந் – தரமோதான்

சேணி லரிவை யணைக்குந் – திருமார்பா
தேவர் மகுட மணக்குங் – கழல்வீரா

காண அருணையில் நிற்குங் – கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனதன தத்தம் – தனதான

பாண மலர் அது தைக்கும் – படியாலே
பாவி இள மதி கக்கும் – கனலாலே

நாணம் அழிய உரைக்கும் – குயிலாலே
நானும் மயலில் இளைக்கும் – தரமோ தான்

சேணில் அரிவை அணைக்கும் – திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் – கழல் வீரா

காண அருணையில் நிற்கும் – கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் – பெருமாளே.

English

pANa malarathu thaikkum – padiyAlE
pAvi yiLamathi kakkung – kanalAlE

nANa mazhiyavu raikkung – kuyilAlE
nAnu mayalili Laikkun – tharamOthAn

sENi larivaiya Naikkun – thirumArpA
thEvar makudama Nakkung – kazhalveerA

kANa aruNaiyil niRkung – kathirvElA
kAlan muthukaivi rikkum – perumALE.

English Easy Version

pANa malar athu thaikkum – padiyAlE
pAvi iLa mathi kakkum – kanalAlE

nANam azhiya uraikkum – kuyilAlE
nAnum mayalil iLaikkum – tharamO thAn

sENil arivai aNaikkum – thiru mArpA
thEvar makudam maNakkum – kazhal veerA

kANa aruNaiyil niRkum – kathirvElA
kAlan muthukai virikkum – perumALE.