Thiruppugal 836 Ayilarmaikkadu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன – தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு – விலைமாதர்
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து – தமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண – மதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத – மருள்வாயே
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை – யிடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு – திறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி – யுறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனா தத்தன தனனா தத்தன
தனனா தத்தன – தனதான
அயில் ஆர் மைக் கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு – விலைமாதர்
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள்
அவர் ஏவல் செய்து – தமியேனும்
மயலாகித் திரிவது தான் அற்றிட
மல மாயைக் குணம் – அது மாற
மறையால் மிக்க அருள் பெறவே அற்புத
மது மாலைப் பதம் – அருள்வாயே
கயிலாயப் பதி உடையாருக்கு ஒரு
பொருளே கட்டளை – இடுவோனே
கடல் ஓடிப் புகு முது சூர் பொட்டு எழ
கதிர் வேல் விட்டிடு – திறலோனே
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய
குடவாயில் பதி – உறைவோனே
குற மாதைப் புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் – பெருமாளே
English
ayilAr maikkadu vizhiyAr mattaikaL
ayalAr naththidu – vilaimAthar
aNaimee thitRuyil pozhuthE thettika
LavarE vaRseythu – thamiyEnum
mayalA kiththiri vathuthA natRida
malamA yaikkuNa – mathumARa
maRaiyAl mikkaruL peRavE yaRputha
mathumA laippatha – maruLvAyE
kayilA yappathi yudaiyA rukkoru
poruLE kattaLai – yiduvOnE
kadalO dippuku muthucUr pottezha
kathir vEl vittidu – thiRalOnE
kuyilA liththidu pozhilE sutRiya
kudavA yiRpathi – yuRaivOnE
kuRamA thaippuNar sathurA viththaka
kuRaiyA meyththavar – perumALE.
English Easy Version
ayil Ar maik kadu vizhiyAr mattaikaL
ayalAr naththidu – vilaimAthar
aNai meethil thuyil pozhuthE thettikaL
avar Eval seythu – thamiyEnum
mayalAkith thirivathu thAn atRida
mala mAyaik kuNam – athu mARa
maRaiyAl mikka aruL peRavE aRputha
mathu mAlaip patham – aruLvAyE
kayilAyap pathi udaiyArukku oru
poruLE kattaLai – iduvOnE
kadal Odip puku muthu cUr pottu ezha
kathir vEl vittidu – thiRalOnE
kuyil Aliththidu pozhilE sutRiya
kudavAyil pathi – uRaivOnE
kuRa mAthaip puNar sathurA viththaka
kuRaiyA meyththavar – perumALE