Thiruppugal 865 Kendaineroththavizhi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன – தனதான
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு – மணநாறுங்
கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
கிஞ்சுகா ணப்பெருகி – யடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனா கப்புவியி – லுழலாமல்
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு – மருள்வாயே
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
ளைந்துவீ ழப்பொருத – கதிர்வேலா
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி – டசுரோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை – யரிவோனே
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ ணத்திலுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
தந்தனா தத்ததன – தனதான
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை
கெந்த வாசப் புழுகு – மண(ம்) நாறும்
கிம்புரி ஈசக் களப(ம்) கொங்கை யானைச் சிறிது
கிஞ்சு காணப் பெருகி – அடியேனும்
மண்டி மோசக் கலவி கொண்டு காமித்து உருகி
வண்டன் ஆகப் புவியில் – உழலாமல்
வந்து ஞானப் பொருளில் ஒன்று போதித்து உனது
மஞ்சு தாளைத் தினமும் – அருள்வாயே
அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி
இளைந்து வீழப் பொருத – கதிர்வேலா
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறித் தவசில் அன்பு
உளாரைச் சிறையி(ட்)ட – அசுரோரைக்
கொண்டு போய் வைத்த கழு நெஞ்சில் ஏறக் கழுகு
கொந்தி ஆடத் தலையை – அரிவோனே
கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு
கும்பகோணத்தில் உறை – பெருமாளே.
English
keNdainE roththavizhi mangaimO kakkalavai
kenthavA sappuzhuku – maNanARum
kimpuree sakkaLapa kongaiyA naicchiRithu
kinjukA Napperuki – yadiyEnum
maNdimO sakkalavi koNdukA miththuruki
vaNdanA kappuviyi – luzhalAmal
vanthunjA napporuLi lonRupO thiththunathu
manjuthA Laiththinamu – maruLvAyE
aNdarvA zhappirapai saNdamE rukkiriyi
Lainthuvee zhapporutha – kathirvElA
anjuvA yiRparanai nenjilU Riththavasi
nanpuLA raicchiRaiyi – dasurOraik
koNdupOy vaiththakazhu nenjilE Rakkazhuku
konthiyA daththalaiyai – yarivOnE
koNdalcU zhakkazhani sangulA vipparavu
kumpakO NaththiluRai – perumALE.
English Easy Version
keNdai nEr oththa vizhi mangai mOkak kalavai
kentha vAsap puzhuku – maNa(m) nARum
kimpuri eesak kaLapa(m) kongai yAnaic chiRithu
kinju kANap peruki – adiyEnum
maNdi mOsak kalavi koNdu kAmiththu uruki
vaNdan Akap puviyil – uzhalAmal
vanthu njAnap poruLil onRu pOthiththu unathu
manju thALaith thinamum – aruLvAyE
aNdar vAzhap pirapai saNda mEruk kiri
iLainthu veezhap porutha – kathirvElA
anju vAyil paranai nenjil URith thavasil
anpu uLArais siRaiyi(d)da – asurOraik
koNdu pOy vaiththa kazhu nenjil ERak kazhuku
konthi Adath thalaiyai – arivOnE
koNdal cUzh akkazhani sangu ulAvip paravu
kumpakONaththil uRai – perumALE.,