Thiruppugal 915 Megalainegizhththu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி – யழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி – மதராசன்
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி – விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை யவர்க்குக் காட்டி – யழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு – வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டு – மிளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த – தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார் குழல் விரித்துக் காட்டி
வேல் விழி புரட்டிக் காட்டி – அழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடகம் நடித்துக் காட்டி
வீடுகள் அழைத்துக் காட்டி – மத ராசன்
ஆகமம் உரைத்துக் காட்டி வார் அணி தனத்தைக் காட்டி
யாரொடு(ம்) நகைத்துக் காட்டி – விரகாலே
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை அவர்க்குக் காட்டி – அழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமும் எடுத்துக் காட்டி
மூ தமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா
மூ உலகு அளித்துக் காட்டி சேவலை உயர்த்திக் காட்டு
மூரி வில் மதற்குக் காட்டு – வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ் மயில் நடத்திக் காட்டும் – இளையோனே
மா மலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த – பெருமாளே.
English
mEkalai nekizhththuk kAtti vArkuzhal viriththuk kAtti
vElvizhi purattik kAtti – yazhakAka
mEniyai minukkik kAtti nAdaka nadiththuk kAtti
veeduka Lazhaiththuk kAtti – matharAsan
Akama muraiththuk kAtti vAraNi thanaththaik kAtti
yArodu nakaiththuk kAtti – virakAlE
Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta
Asaiyai yavarkkuk kAtti – yazhivEnO
mOkana viruppaik kAtti njAnamu meduththuk kAtti
mUthamizh munikkuk kUttu – gurunAthA
mUvula kaLiththuk kAtti sEvalai yuyarththik kAttu
mUrivil mathaRkuk kAttu – vayalUrA
vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti
vAzhmayil nadaththik kAttu – miLaiyOnE
mAmalai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti
vAnavar siraththaik kAththa – perumALE.
English Easy Version
mEkalai nekizhththuk kAtti vAr kuzhal viriththuk kAtti
vEl vizhi purattik kAtti – azhakAka
mEniyai minukkik kAtti nAdakam nadiththuk kAtti
veedukaL azhaiththuk kAtti – matha rAsan
Akamam uraiththuk kAtti vAr aNi thanaththaik kAtti
yArodu(m) nakaiththuk kAtti – virakAlE
Athara manaththaik kAtti vEsaikaL mayakkaik kAtta
Asaiyai avarkkuk kAtti – azhivEnO
mOkana viruppaik kAtti njAnamum eduththuk kAtti
mU thamizh munikkuk kUttu – gurunAthA
mU ulaku aLiththuk kAtti sEvalai uyarththik kAttu
mUri vil mathaRkuk kAttu – vayalUrA
vAkaiyai mudiththuk kAtti kAnavar samarththaik kAtti
vAzh mayil nadaththik kAttum – iLaiyOnE
mA malai vethuppik kAtti thAnavar thiRaththaik kAtti
vAnavar siraththaik kAththa – perumALE.