1 – சீர்பாத வகுப்பு

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத – சதகோடி சூரியர்கள் – 1

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல – ஒருசோதி வீசுவதும் – 2

உடலுமுட லுயிருநிலை பெறுதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன – சிவயோக சாதனையில் – 3

ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி – தமதூடு நாடுவதும் – 4

உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய – கலையார வாரமற – 5

உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ – ரநுபூதி யானதுவும் – 6

உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ – சலராசி யேறவிடும் – 7

உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது – மடியேன் மனோரதமும் – 8

இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு – பதிசேர் சடாமவுலி – 9

இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு – திருமார்பி லாடுவதும் – 10

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி – அபிஷேக மாயிரமும் – 11

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி – விளையாடல் கூருவதும் – 12

இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட – தடபார மேருவுடன் – 13

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் – வலமாக வோடுவதும் – 14

எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் – இரைதேர்க டாடவியில் – 15

எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் – புனமீ துலாவுவதும் – 16

முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல – வருகால தூதர்கெட – 17

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் – பகைகோடி சாடுவதும் – 18

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள – முழுநீல தீவரமும் – 19

முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ – முயல்வார் தபோபலமும் – 20

முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென – அருள்பாடி யாடிமிக – 21

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென – அறைகூவி யாளுவதும் – 22

முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி – கொடுபாடும் ஆசுகவி – 23

முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில – கவிமாலை சூடுவதும் – 24

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு – விசையாதி மூலமென – 25

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு – குறளாகி மாபலியை – 26

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு – பதுவாகு பூதரமும் – 27

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் – வருதார காசுரனும் – 28

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் – வடிவேல னீலகிரி – 29

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி – யுமையாள்த்ரி சூலதரி – 30

வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை – யபிராம நாயகிதன் – 31

மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் – மணநாறு சீறடியே – 32

பதம் பிரித்தது

உததி இடை கடவும் மரகத அருண குல துரக
உப லளித கனக ரத – சதகோடி சூரியர்கள் – 1

உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை
யுக முடிவில் இருள் அகல – ஒரு சோதி வீசுவதும் – 2

உடலும் உடல் உயிரும் நிலைபெறுதல் பொருள் என உலகம்
ஒருவி வரும் மநுபவன – சிவ யோக சாதனையில் – 3

ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி – தமது ஊடு நாடுவதும் – 4

உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும்
உழலுவன பரசமய – கலை ஆரவாரம் அற
– 5

உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் – அநுபூதி ஆனதுவும் – 6

உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம்
உருவுடைய மலினம் பவம் – சல ராசி ஏற விடும் – 7

உறுபுணையும் அறிமுகமும் உயரி அமரர் மணி முடியில்
உறைவதுவும் உலைவிலதும் – அடியேன் மனோரதமும் – 8

இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகண் அரவு
இம கிரண தருண உடுபதி – சேர் சடா மவுலி – 9

இறை மகிழ உடை மணியோடு அணி சகல மணி கலென
இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும் 10

இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு
எரி புகுத உரகர்பதி – அபிஷேகம் ஆயிரமும்
– 11

எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடு இடிய
இளைய தளர் நடைபழகி – விளையாடல் கூருவதும் – 12

இனிய கனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும்
இலகு வெகுகட விகட – தட பார மேருவுடன் – 13

இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் – வலமாக ஓடுவதும் – 14

எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் – இரை தேர் கடாடவியில் – 15

எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் – புனம் மீது உலாவுவதும் – 16

முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு
முதுவடவை விழிசுழல – வருகால தூதர்கெட – 17

முடுகுவதும் அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை
முடிய வருவதும் அடியர் – பகைகோடி சாடுவதும் – 18

மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது
குறு முறியும் மலர் வகுள தள – முழு நீல தீவரமும் – 19

முருகு கமழ்வதும் அகில முதனை தருவதும் விரத
முநிவர் கருத அரிய தவம் – முயல்வார் தபோ பலமும் – 20

முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும்
அறுமுக குமர சரணம் என – அருள் பாடி ஆடி மிக – 21

மொழி குழுற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருக என – அறை கூவி ஆளுவதும் – 22

முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும்
உலகறிய மழலை மொழி – கொடு பாடும் ஆசு கவி – 23

முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இத மவுன
முகுள பரிமள நிகில – கவி மாலை சூடுவதும் – 24

மத சிகரி கதறி முது முதலை கவர் தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு – விசை ஆதி மூலமே என – 25

வரு கருணை வரதன் இகல் இரணியனை நுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு – குறள் ஆகி மாபலியை – 26

வலிய சிறை இட வெளியின் முகடு கிழி பட முடிய
வளரு முகில் நிருதன் இருபது – வாகு பூதரமும் – 27

மகுடம் ஒருபதும் முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் – வரு தாரகாசுரனும் – 28

மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி
மறுகி முறை இட முனியும் – வடிவேலன் நீலகிரி – 29

மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி -உமையாள் த்ரிசூலதரி – 30

வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை
வநிதை அபினவை அநகை – அபிராம நாயகி தன் – 31

மதலை மலைகிழவன் அநுபவன் அபயன் உபய சதுர்
மறையின் முதல் நடு முடிவின் – மணநாறு சீறடியே – 32