மயில் விருத்தம் – பதம் பிரித்தது

காப்பு
சந்தன பாளித

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்
கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்

கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

(1)
சந்தான புஷ்பபரி

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.

(2)
சக்ரப் ரசண்டகிரி

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.

(3)
ஆதார பாதளம்

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ
தண்டமுக டதுபெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி
கவுட்கிரி சரம்பெயரவே

வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்
மிக்கப் ரியப்படவிடா
விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்தசே கரனேய மலரும்உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

(4)
யுககோடி முடிவின்

யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
உதித்ததென் றயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.

(5)
சோதியிம வேதண்ட

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
யாவுங் கொடுஞ்சி றகினால்
அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே.

(6)
சங்கார காலமென

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.

(7)
தீரப் பயோததி

தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப் புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சைப்ர வாள மயிலாம்

ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர
அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர
மாநந்த வல்லி சிறுவன்

கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே.

(8)
செக்கரள கேசசிக

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

(9)
சிகரதமனிய மேரு

சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண்
திங்கள்சங் கெனவும்ப்ரபா

நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்

அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே

மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய
வையாளி யேறு மயிலே

(10)
நிராசத விராசத

நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே

(11)
எந்நாளும் ஒருசுனையில்

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்த ணிகைவாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழு வப்பெ றுவரால்
மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெ றுவரே.

சந்தன பாளித குங்குமம் புளகித சண்பக கடக புயச்
சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவு அணியும்
கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப் பரவுங்
கூதள சீதள பாதம் எனக்கு அருள் குஞ்சரி மஞ்சரிதோய்

கந்த க்ருபா கர கோமள கும்ப கர அதிப மோக ரத
கர முக சாமர கர்ண விசால கபோல விதான மதத்
தெந்த மகோதர மூஷிக வாகன சிந்து ர பத்ம முகச்
சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

(1)
சந்தான புஷ்பபரி

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்
சரண யுகள அமிர்த ப்ரபா
சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக
சத்ய ப்ரிய ஆலிங்கன

சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக விநாயகன் முதல்
சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க
வனசரோதய கிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி
அ வர அசலன் குலிசாயுதத்து

இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல் வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.

(2)
சக்ரப் ரசண்டகிரி

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய
பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே.

(3)
ஆதார பாதளம்

ஆதார பாதளம் பெயர அடி பெயர
மூதண்டம் முகடது பெயரவே
ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி
கவுள் கிரிசரம் பெயரவே

வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார்
மிக்க பிரியப்பட விடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி
மகீதரி கிராத குலி
மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த
வள்ளி மணி நூபுர மலர்ப்

பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே.

(4)
யுககோடி முடிவின்

யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம்
உதித்தது என்று அயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொன் குவடு உறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு
விசும்பில் பறக்க விரிநீர்
வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம்
முகில் உலவு நீலகிரி வாழ்
முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட
மூரிக் கலாப மயிலே.

(5)
சோதியிம வேதண்ட

சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவும் கொடும் சிறகினால்
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்கும் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்கு வாள்

மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே.

(6)
சங்கார காலமென

சங்கார காலம் என அரி பிரமர் வெருவுற
சகல லோகமும் நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப்பட உமையுடன்

கங்காளர் தனி நாடகம் செய்த போது அந்த
காரம் பிறந்திட நெடும்
ககனகூட மும் மேலை முகடு மூடிய பசும்
கற்றைக் கலாப மயிலாம்

சிங்கார குங்கும படீர ம்ருக மத யுகள
சித்ரப் பயோதர கிரித்
தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீரதன் இருங்

கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயன்
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழி பட நடாவு மயிலே.

(7)
தீரப் பயோததி

தீரப் பயோததி திக்கும் ஆகாயமும்
செகதலமும் நின்று சுழலத்
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத்
தீக்கொப்புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்கப்
படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு
பச்சை ப்ரவாள மயிலாம்

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த கலசக் கொங்கையாள்
ஆடு மயில் நிகர் வல்லி அபிராம வல்லி பர
மாநந்த வல்லி சிறுவன்

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குரு தரு திருத்தணி கைவேள்
கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி
குடி புகுத நடவு மயிலே.

(8)
செக்கரள கேசசிக

செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை
சிந்தப் புராரி அமிர்தம்
திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்
தீ விஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயனத்
தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு
சண்டப் பரசண்ட மயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீது உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்து எனை
வெளிப்பட உணர்த்தி அருளித்

துக்க சுக பேதம் அற வாழ்வித்த கந்தச்
சுவாமி வாகனமானது ஓர்
துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குல
துஷ்டர் நிஷ்டூர மயிலே.

(9)
சிகரதமனிய மேரு

சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண்
திங்கள்சங்கு எனவும் ப்ரபா

நிகர் எனவும் எழுதரிய நேமி என உலகடைய
நின்ற மாமுகில் என்னவே
நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு
நீலக் கலாப மயிலாம்

அகரு மருமணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்து அசைய ஆறிரு புயங்களில்
அலங்கல் குழாம் அசையவே

மகர கன கோமளம் குண்டலம் பல அசைய
வல் அவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய
வையாளி ஏறு மயிலே.

(10)
நிராசத விராசத

நிராசத விராசத வரோதய பராபரன்
நிராகுலன் நிராமய பிரான்
நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி
நிலாவிய உலாச இதயன்

குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயி லாயுதன் நெடும்

தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரி இத படா திகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.

(11)
எந்நாளும் ஒருசுனையில்

எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது
இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும் ஒரு
நம்பிரான் ஆன மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரிநாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல் தரு மாசறு விருத்தம் ஒரு பத்தும்
படிப்பவர்கள் ஆதி மறை நூல்

மன் நான்முகன் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர்
வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப் பெறுவர்
வாரிச மடந்தையுடன் வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதாசனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
அழியா வரம் பெறுவரே.