தேவேந்திர சங்க வகுப்பு – 2

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

Thevendra Sanga Vaguppu – 2

பாடல்

தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி (1)

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை (2)

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை (3)

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி (4)

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் (5)

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் (6)

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை (7)

எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி (8)

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் (9)

கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் (10)

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு (11)

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் (12)

அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் (13)

அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் (14)

அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் (15)

அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே (16)

பதம் பிரித்தது

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல் தனை நக நுதி கொடு
சாடு ஓங்கு நெடுங் கிரியோடு ஏந்து பயங்கரி! (1)

தமருக பரிபுர ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை! (2)

சரி வளை விரி சடை எரி புரை வடிவினள் சததள முகுளித
தாம அங்குசம் மென் திருத் தாள் அந்தர அம்பிகை! (3)

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தட மணி முடி பொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி! – (4)

இரண கிரண மட மயில் ம்ருகமத புளகித இள முலை இள
நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்! (5)

இறுகிய சிறு பிறை எயிறு உடை யம படர் எனது உயிர் கொள வரின்
யான் ஏங்குதல் கண்டு எதிர் தான் ஏன்று கொளும் குயில்! (6)

இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெட விடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை! (7)

எழுதிய படம் என இருள் அறு சுடர் அடி இணை தொழு மவுனிகள்
ஏகாந்த சுலந்தரு பாசாங்குச சுந்தரி! (8)

கரணமும் மரணமும் மலமொடும் உடல் படு கடு வினை கெட நினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சு உமிழ்! (9)

கனல் எரி கண பண குண மணி அணி பணி கன வளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்! (10)

கனை கழல் நினையலர் உயிர் அவி பயிரவி கவுரி கமலை குழை
காது ஆர்ந்த செழுங் கழுநீர் தோய்ந்த பெருந்திரு! (11)

கரை பொழி திருமுக கருணையில் உலகு எழு கடல் நிலை பெற வளர்
கா ஏந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்! (12)

அரண் நெடு வட வரை அடியொடு பொடி பட அலை கடல் கெட அயில்
வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்! (13)

அறுமுகன் ஒருபதொடு இரு புயன் அபிநவன் அழகிய குறமகள்
தார் வேந்த புயன் பகை ஆம் மாந்தர்கள் அந்தகன்! (14)

அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா
மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்! (15)

அதிபதி என வரு பெரு திறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே! (16)

ENGLISH

taraṇiyi laraṇiya muraṇira ṇiyanuṭal tanainaka nutikoṭu
sāṭōṅkunet ṭuṅkiri yōṭēntupa yaṅkari (1)

tamaruka paripura olikoṭu naṭanavil saraṇiya saturmaṟai
tātāmpuya mantira vētāntapa ramparai (2)

sarivaḷai virisaṭai yeripurai vaṭivinaḷ satataḷa mukuḷita
tāmāṅkusa meṉtiru tāḷāntara ampikai (3)

tarupati surarōṭu saruviya asurarkaḷ taṭamaṇi muṭipoṭi
tāṉāmpaṭi ceṅkaiyil vāḷvāṅkiya saṅkari (4)

iraṇaki raṇamaṭa mayiṉmruka matapuḷa kitaviḷa mulaiyiḷa
nīrtāṅkiṉu ṭaṅkiya nūlpōṉṟama ruṅkiṉaḷ (5)

iṟukiya ciṟupiṟai yeyiṟuṭai yamapaṭar ena t uyir koḷavariṉ
yāṉēṅkutal kaṇṭetir tāṉēṉṟuko ḷuṅkuyil (6)

iṭupali koṭutiri iravalar iṭarkeṭa viṭumaṉa karatala
ēkāmparai yintirai mōkāṅkasu maṅkalai (7)

eḻutiya paṭamena iruḷaṟu cuṭaraṭi yiṇaitoḻu mavuṉikaḷ
ēkāntasu lantarupa sāṅkusa suntari (8)

karaṇamu maraṇamu malamoṭu muṭalpaṭu kaṭuviṉai keṭaninai
kālāntari kantari nīlāñcaṉi nañcumiḻ (9)

kaṉaleri kaṇapaṇa kuṇamaṇi yaṇipaṇi kaṉavaḷai marakata
kāsāmpara kañcuḷi tūsāmpaṭi koṇṭavaḷ (10)

kaṉaikaḻal niṉaiyalar uyiravi payiravi kavurika malaikuḻai
kātārntace ḻuṅkaḻu nīrtōynta peruntiru (11)

karaipoḻi tirumuka karuṇaiyi lulakeḻu kaṭanilai peṟavaḷar
kāvēntiya paiṅkiḷi māsāmpavi tantavaṉ (12)

araṇeṭu vaṭavarai yaṭiyoṭu poṭipaṭa alaikatal keṭa-ayil
vēlvāṅkiya centamiḻ nūlōṉkuma raṉkukaṉ (13)

aṟumuka ṉorupato ṭirupuya ṉapiṉava ṉaḻakiya kuṟamakaḷ
tārvēntapu yaṉpakai yāmāntarkaḷ antakaṉ (14)

aṭaṉmiku kaṭataṭa vikaṭita matakaḷi ṟaṉavara tamumaka
lāmāntarkaḷ cintaiyil vāḻvāmpaṭi centilil (15)

atipati yeṉavaru perutiṟal murukaṉai aruḷpaṭa moḻipavar
ārāyntu vaṇaṅkuvar tēvēntira saṅkamē (16)

ENGLISH EASY VERSION

taraṇiyil araṇiya muraṇ iraṇiyaṉ uṭal taṉai naka nuti koṭu
sāṭu ōṅku neṭuṅ kiriyōṭu ēntu payaṅkari! (1)

tamaruka paripura oli koṭu naṭa navil saraṇiya satur maṟai
tātāmpuya mantira vētānta paramparai! (2)

sari vaḷai viri saṭai eri purai vaṭiviṉaḷ satataḷa mukuḷita
tāma aṅkusam meṉ tirut tāḷ antara ampikai! (3)

tarupati surarōṭu saruviya asurarkaḷ taṭa maṇi muṭi poṭi
tāṉ āmpaṭi ceṅkaiyil vāḷ vāṅkiya saṅkari! (4)

iraṇa kiraṇa maṭa mayil mrukamata puḷakita iḷa mulai iḷa
nīr tāṅki nuṭaṅkiya nūl pōṉṟa maruṅkiṉaḷ! (5)

iṟukiya ciṟu piṟai eyiṟu uṭai yama paṭar eṉatu uyir koḷa variṉ
yāṉ ēṅkutal kaṇṭu etir tāṉ ēṉṟu koḷum kuyil! (6)

iṭupali koṭu tiri iravalar iṭar keṭa viṭu maṉa karatala
ēkāmparai intirai mōkāṅka sumaṅkalai! (7)

eḻutiya paṭam eṉa iruḷ aṟu cuṭar aṭi iṇai toḻu mavuṉikaḷ
ēkānta sulantaru pāsāṅkusa suntari! (8)

karaṇamum maraṇamum malamoṭum uṭal paṭu kaṭu viṉai keṭa niṉai
kālāntari kantari nīlāñcaṉi nañcu umiḻ! (9)

kaṉal eri kaṇa paṇa kuṇa maṇi aṇi paṇi kaṉa vaḷai marakata
kāsāmpara kañcuḷi tūsāmpaṭi koṇṭavaḷ! (10)

kaṉai kaḻal niṉaiyalar uyir avi payiravi kavuri kamalai kuḻai
kātu ārnta ceḻuṅ kaḻunīr tōynta peruntiru! (11)

karai poḻi tirumuka karuṇaiyil ulaku eḻu kaṭal nilai peṟa vaḷar
kā ēntiya paiṅkiḷi mā sāmpavi tantavaṉ! (12)

araṇ neṭu vaṭa varai aṭiyoṭu poṭi paṭa alai kaṭal keṭa ayil
vēl vāṅkiya centamiḻ nūlōṉ kumaraṉ kukaṉ! (13)

aṟumukaṉ orupatoṭu iru puyaṉ apiṉavaṉ aḻakiya kuṟamakaḷ
tār vēnta puyaṉ pakai ām māntarkaḷ antakaṉ! (14)

aṭal miku kaṭa taṭa vikaṭita mata kaḷiṟu aṉavaratamum akalā
māntarkaḷ cintaiyil vāḻvāmpaṭi centilil! (15)

atipati eṉa varu peru tiṟal murukaṉai aruḷpaṭa moḻipavar
ārāyntu vaṇaṅkuvar tēvēntira saṅkamē! (16)