ஒன்பதாம் திருமொழி – சிந்தூரச் செம்பொடி

திருமாலிருஞ்சோலை யெம்பெருமானை வழிபடுதல்

587 சிந்துரச்செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும்பரந்திட்டனவால்
மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறுகொண்ட
சுந்தரத்தோளுடையான் சுழலையில்நின்றுய்துங்கொலோ? (2) 1

588 போர்களிறுபொரும் மாலிருஞ்சோலையம்பூம்புறவில்
தார்க்கொடிமுல்லைகளும் தவளநகைகாட்டுகின்ற
கார்க்கொள்பிடாக்கள்நின்று கழறிச்சிரிக்கத்தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழி! அவன்தார்ச்செய்தபூசலையே. 2

589 கருவிளையொண்மலர்காள்! காயாமலர்காள்! திருமால்
உருவொளிகாட்டுகின்றீர் எனக்குய்வழக்கொன்றுரையீர்
திருவிளையாடுதிண்தோள் திருமாலிருஞ்சோலைநம்பி
வரிவளையில்புகுந்து வந்திபற்றும்வழக்குளதே. 3

590 பைம்பொழில்வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண்கருவிளைகாள்
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலைநின்ற
எம்பெருமானுடையநிறம் உங்களுக்கெஞ்செய்வதே? 4

591 துங்கமலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற
செங்கட்கருமுகிலின் திருவுருப்போல் மலர்மேல்
தொங்கியவண்டினங்காள்! தொகுபூஞ்சுனைகாள்! சுனையில்
தங்குசெந்தாமரைகாள்! எனக்கோர்சரண்சாற்றுமினே. 5

592 நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்
நூறுதடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன்
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ. (2) 6

593 இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான்
ஒன்றுநூறாயிரமாக்கொடுத்துப் பின்னும்ஆளும்செய்வன்
தென்றல்மணங்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடியேன்மனத்தே வந்துநேர்படிலே. 7

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள்
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ?
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான்
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே. 8

595 கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன்மாலைகளோடு உடனாய்நின்றுதூங்குகின்றேன்
பூங்கொள்திருமுகத்து மடுத்தூதியசங்கொலியும்
சார்ங்கவில்நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்று கொலோ? 9

596 சந்தொடுகாரகிலும்சுமந்து தடங்கள்பொருது
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே. (2) 10

1 thought on “ஒன்பதாம் திருமொழி – சிந்தூரச் செம்பொடி”

Leave a Reply