Thiruppugal 392 Arukkarnalaththai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் – தனதான
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் – தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் – டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் – பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் – புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் – துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் – குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் – பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் – தனதான
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு
அடுத்த ஆசை பற்றித் – தளராதே
அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு
அறப் பேதகப் பட்டு – அழியாதே
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து
கலிச் சாகரத்தில் – பிறவாதே
கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து
கலைப் போதகத்தைப் – புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து – உறைவோனே
உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு
ஒளித்து ஓடும் வெற்றிக் – குமரேசா
செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு
அச் செருச் சூர் மரிக்கப் – பொரும் வேலா
திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில்
திருக் கோபுரத்தில் – பெருமாளே.
English
arukkAr nalaththaith thirippAr manaththuk
kaduththAsai patRith – thaLarAthE
adaRkA lanukkuk kadaikkAl mithiththit
taRappE thakappat – tazhiyAthE
karukkArar natpaip perukkA sariththuk
kaliccA karaththiR – piRavAthE
karuththA lenakkuth thiruththA LaLiththuk
kalaippO thakaththaip – pukalvAyE
orukkAl ninaiththit tirukkAl mikuththit
turaippArkaL siththath – thuRaivOnE
uraththO LidaththiR kuRaththEnai vaiththit
toLiththOdum vetRik – kumarEsA
serukkA tharukkic curaccUr nerukkac
cseruccUr marikkap – porumvElA
thiRappU thalaththiR RiratcONa veRpiR
RirukkO puraththiR – perumALE.
English Easy Version
arukkAr nalaththaith thirippAr manaththuk
kaduththAsai patRith – thaLarAthE
adaRkA lanukkuk kadaikkAl mithiththitu
aRappE thakappat – tazhiyAthE
karukkArar natpaip perukkA sariththuk
kaliccA karaththiR – piRavAthE
karuththA lenakkuth thiruththA LaLiththuk
kalaippO thakaththaip – pukalvAyE
orukkAl ninaiththit tirukkAl mikuththit
turaippArkaL siththath – thuRaivOnE
uraththO LidaththiR kuRaththEnai vaiththittu
oLiththOdum vetRik – kumarEsA
serukkA tharukkic curaccUr nerukku
acceruccUr marikkap – porumvElA
thiRappU thalaththiR RiratcONa veRpiR
RirukkO puraththiR – perumALE.