ஸ்ரீரங்கநாதனதுசேவையைநாடுதல்
647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2) 1
648 வாயோரீரைஞ்ஞாறுதுதங்களார்ந்த
வளையுடம்பினழல்நாகம்உமிழ்ந்தசெந்தீ
வீயாதமலர்ச்சென்னிவிதானமேபோல்
மேன்மேலும்மிகவெங்கும்பரந்ததன்கீழ்
காயாம்பூமலர்ப்பிறங்கலன்னமாலைக்
கடியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
மாயோனைமணத்தூணேபற்றிநின்றுஎன்
வாயாரஎன்றுகொலோவாழ்த்தும்நாளே? 2
649 எம்மாண்பின்அயன்நான்குநாவினாலும்
எடுத்தேத்திஈரிரண்டுமுகமுங்கொண்டு
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடும்
தொழுதேத்திஇனிதிறைஞ்சநின்ற செம்பொன்
அம்மான்றன்மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
அம்மான்றனடியிணைக்கீழலர்களிட்டங்
கடியவரோடென்றுகொலோஅணுகும்நாளே? 3
650 மாவினைவாய்பிளந்துகந்தமாலைவேலை
வண்ணணைஎன்கண்ணணை வன்குன்றமேந்தி
ஆவினையன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள்தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை அவ்வடமொழியைப்பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
கோவினைநாவுறவழுத்திஎன்றன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே? 4
651 இணையில்லாவின்னிசையாழ்கெழுமியின்பத்
தும்புருவும்நாரதனுமிறைஞ்சியேத்த
துணையில்லாத்தொன்மறைநூல்தோத்திரத்தால்
தொன்மலர்க்கணயன்வணங்கியோவாதேத்த
மணிமாடமாளிகைகள்மல்குசெல்வ
மதிளரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
மணிவண்ணனம்மானைக்கண்டுகொண்டுஎன்
மலர்சென்னியென்றுகொலோவணங்கும்நாளே? 5
652 அளிமலர்மேலயனரனிந்திரனோடுஏனை
அமரர்கள்தம்குழுவுமரம்பையரும்மற்றும்
தெளிமதிசேர்முனிவர்கள்தம்குழுவுமுந்தித்
திசைதிசையில்மலர்தூவிச்சென்றுசேரும்
களிமலர்சேர்பொழிலரங்கத்துரகமேறிக்
கண்வளரும்கடல்வண்ணர்கமலக்கண்ணும்
ஒளிமதிசேர்திருமுகமும்கண்டுகொண்டுஎன்
உள்ளமிகஎன்றுகொலோவுருகும்நாளே? 6
653 மறந்திகழுமனமொழித்துவஞ்சமாற்றி
ஐம்புலன்களடக்கியிடர்ப்பாரத்துன்பம்
துறந்து இருமுப்பொழுதேத்தியெல்லையில்லாத்
தொன்னெறிக்கண்நிலைநின்றதொண்டரான
அறம்திகழும்மனத்தவர்தம்கதியைப்பொன்னி
அணியரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும்
நிறம்திகழும்மாயோனைக்கண்டுஎன்கண்கள்
நீர்மல்கஎன்றுகொலோநிற்கும்நாளே? 7
654 கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்
கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள்
காலார்ந்தகதிக்கருடனென்னும்வென்றிக்
கடும்பறவையிவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப
சேலார்ந்தநெடுங்கழனிசோலைசூழ்ந்த
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
மாலோனைக்கண்டின்பக்கலவியெய்தி
வல்வினையேனென்றுகொலோவாழும்நாளே? 8
655 தூராதமனக்காதல்தொண்டர்தங்கள்
குழாம்குழுமித்திருப்புகழ்கள்பலவும்பாடி
ஆராதமனக்களிப்போடழுதகண்ணீர்
மழைசோரநினைந்துருகியேத்திநாளும்
சீரார்ந்தமுழுவோசைபரவைகாட்டும்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
போராழியம்மானைக்கண்டுதுள்ளிப்
பூதலத்திலென்றுகொலோபுரளும்நாளே? 9
656 வன்பெருவானகமுய்யஅமரருய்ய
மண்ணுய்யமண்ணுலகில்மனிசருய்ய
துன்பமிகுதுயரகலஅயர்வொன்றில்லாச்
சுகம்வளரஅகமகிழுந்தொண்டர்வாழ
அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்
அணியரங்கன்திருமுற்றத்து அடியார்தங்கள்
இன்பமிகுபெருங்குழுவுகண்டுயானும்
இசைந்துடனேயென்றுகொலோவிருக்குநாளே? (2) 10
657 திடர்விளங்குகரைப்பொன்னிநடுவுபாட்டுத்
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும்
கடல்விளங்குகருமேனியம்மான்றன்னைக்
கண்ணாரக்கண்டுகக்கும்காதல்தன்னால்
குடைவிளங்குவிறல்தானைக்கொற்றவொள்வாள்
கூடலர்கோன்கொடைகுலசேகரன்சொற்செய்த
நடைவிளங்குதமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2) 11
[…] முதல் திருமொழி – இருளிரியச்சுடர்மண… […]